முகப்பு

ரிதீ கந்த

திருகோணமலை அனுராபுர வீதியில் பன்குளம் சந்தியால் திரும்பி திரியாய் பக்கமாக போகும்போது கோமரன்கடவல நகரம் சந்திக்கின்றது. கோமரன்கடவலையில் இருந்து இடது பக்கமாக திரும்பி 8 கி.மீ. தூரம் போனபோது ரிதீ கந்த காணலாம்.

பஞ்ஞாவாச கட்டிட முறைக்கு கட்டப்பட்ட ஆச்சிரமத் தொகுதி இங்கு இருந்ததற்கான தடயங்கள் உள்ளது. தூபி, பிரதிமாகரய (சிலை மண்டபம்), உபோசதாகாரய, போதிகரய போன்ற சிதைவுகளின் மிகுதிகளும் இங்கு காணக் கிடைக்கின்றது. இங்கு வசித்த பிக்குமார்களின் தண்ணீர்த் தேவைகளுக்காக செய்வித்த குளங்கள் இரண்டும் இங்கு உள்ளது. விதவிதமான அளவிலான கற் பாறைகள் அமைந்துள்ள இங்கு பதினைந்திற்கும் மேற்பட்ட நீர்வடி வெட்டப்பட்டு ஆயத்தம் செய்யப்பட்ட கற் குகைகளும் இருக்கின்றது. கல்லினால் ஆக்கப்பட்ட புத்தர் சிலையின் ஒரு பகுதியும் தலை, கை, கால்கள் இல்லாத சிலையும் இங்கு இருக்கின்றது.

வெள்ளிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2012 05:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது